Search

Rasi Palan 11th July 2020: இன்றைய ராசிபலன்

Friday 10 July 2020

Today Rasi Palan, 11th July 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Rasi Palan 11h July 2020: இன்றைய ராசி பலன், ஜுலை 11, 2020
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
நட்புவட்டாரம் விரிவடையும். மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள். புதிய விவகாரங்களில் தலைமையேற்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
மற்றவர்களுக்காக செலவழிப்பீர்கள். நீண்டகால திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பீர்கள். மற்றவர்களுக்கு உதவுவீர்கள். வாகனப்போக்குவரத்தில் கவனம் அவசியம்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)
கணவன் – மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். மற்றவர்களுக்கு அறிவுரை சொல்வீர்கள். முக்கிய விவகாரங்களில் முடிவு எடுக்க வேண்டி வரும். மற்றவர்கள் ஆதரவுக்கரம் நீட்டுவர்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
வியாபார நடவடிக்கைகள் திருப்தி தரும்.எதிர்கால வாழ்விற்காக திட்டமிடுவீர்கள். வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். திட்டமிட்டு செயல்படுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
திறமைகளால் மதிக்கப்படுவீர்கள். வெற்றி ஒருநாளில் கிடைத்துவிடாது என்பதை உணர்வீர்கள். தான் மகிழ்ந்து மற்றவர்களையும் மகிழ்விப்பீர்கள்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். மற்றவர்கள் செய்ய தயங்கும் வேலைகளை எளிதாக செய்து முடிப்பீர்கள். மற்றவர்களால் மதிக்கப்படுவீர்கள்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
கணவன் – மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். மனம் சஞ்சலப்படும்போது உறுதியான முடிவை எடுக்க முடியாது என்பதை உணர்வீர்கள். பயிற்சியே, முயற்சியை வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்லும்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
புதுப்புது தகவல்களால் உற்சாகம் அடைவீர்கள். நிதி விவகாரங்களில் திருப்தி ஏற்படும். விரயத்தை தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளில் ஈடுபடுவீர்கள்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
மற்றவர்களுக்காக பொறுப்பு ஏற்பீர்கள். பொதுநலமாக செயல்படுவீர்கள். நேர்மறை எண்ணத்துடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். தடைகளை தகர்த்தெறிவீர்கள்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
கனவுகளை நனவாக்க பாடுபடுவீர்கள். செயல்களில் சிரத்தையுடன் இருப்பீர்கள். உறவுகளை புதுப்பிப்பதில் அக்கறை காட்டுவீர்கள்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
பிரியமானவர்களின் அன்புக்கு பாத்திரமாவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். மகிழ்ச்சியான தருணங்களை அனுபவிப்பீர்கள். செய்வன திருந்தச்செய் என்பதில் அக்கறை கொள்வீர்கள்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். மற்றவர்களுக்கு உதவுவீர்கள். உண்மை கண்டறியும் நிகழ்வுகளில், முன்னணி வகிப்பீர்கள். தங்கள் வேலைகளில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள்.

நீங்களும் மத்திய அரசு பென்ஷன் வாங்க முடியும்... இந்தத் திட்டத்தை தெரியுமா?

NPS Tamil News: தேசிய ஓய்வூதிய முறையின் அடிப்படை, நன்மைகள், தகுதிகள், பங்களிப்பு வரம்பு குறித்து நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியது இங்கு தரப்பட்டிருக்கிறது. மாதச் சம்பளக்காரர்கள் மட்டும்தான் பென்ஷன் வாங்க வேண்டுமா? மற்றவர்கள் கூடாதா? படியுங்கள் இந்தச் செய்தியை முழுத் தகவல்களுக்கு!
சம்பளம் வாங்குபவர்களுக்காக தேசிய ஓய்வூதிய முறை (National Pension System- NPS) 2004 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் இந்த திட்டம் அனைத்து தரப்பினருக்கும் நீட்டிக்கப்பட்டது.

National Pension System Benefits: தேசிய ஓய்வூதிய முறை

உங்கள் பணி ஓய்வுக்கு பிறகான காலத்திற்கான நிதியை திரட்டுவதற்கு நீங்கள் தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் பணத்தை குறைந்த அளவில் பங்களிப்பு செய்யலாம். சம்பளம் வாங்குபவர்களுக்கு இருக்கின்ற வருங்கால வைப்பு நிதி திட்டம் போல சுய தொழில் செய்பவர்களுக்கு எந்த திட்டமும் இல்லாத காரணத்தால் இது அவர்களுக்கு உதவிகரமாக இருக்கும்.
தேசிய ஓய்வூதிய முறை கணக்கை யார் துவக்க முடியும்?
இந்திய குடிமகன் மற்றும் இந்திய கடவுச்சீட்டு வைத்துள்ளவர்களும் இந்த கணக்கை துவக்கலாம். தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கணக்கு துவங்கும் நபர் குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்தவராக, அதிகப்பட்சம் 65 வயதுக்கு உள்ளானவராகவும் இருக்க வேண்டும். 60 வயதுக்குள் இந்த முறையின் கீழ் கணக்கு துவங்கியவர்களுக்கு, அவர்கள் 60 வயது அடைந்ததும் கணக்கு முதிர்ச்சியடையும்.
தேசிய ஓய்வூதிய முறை கணக்கில் பங்களிப்பு செலுத்துவதற்கான வரம்பு
பொது வருங்கால வைப்பு நிதியில் வருடத்துக்கு ரூபாய் 1.50 லட்சத்துக்கு மேல் டெப்பாசிட் செய்ய முடியாது. ஆனால் தேசிய ஓய்வூதிய முறை கணக்கில் இதுபோன்ற எந்த வரம்பும் இல்லை எனவே நீங்கள் எவ்வளவு தொகையை வேண்டுமானாலும் தேசிய ஓய்வூதிய திட்ட கணக்கில் பங்களிப்பு செய்யலாம்.
இந்த கணக்கை எங்கே துவங்க முடியும்?
தேசிய ஓய்வூதிய முறை கணக்கை ஆன்லைன் அல்லது ஆப்லைன் மூலமாக துவங்கலாம். ஆன்லைன் மூலமாக துவங்க NDSL வலைதளத்துக்கு சென்று துவங்க வேண்டும்.
தேசிய ஓய்வூதிய முறை கணக்கை ஆப்லைன் (offline) மூலமாக துவங்க அரசு நியமித்துள்ள நிறுவனங்கள் பின்வருமாறு, பல்வேறு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள், இந்திய தபால் துறை, Stock Holding Corporation, UTI Asset Management Company மற்றும் UTI Technology Services Limited ஆகியவை.
Joint holding and nomination
தேசிய ஓய்வூதிய முறை கணக்கை ஒரு பெயரில் மட்டும்தான் துவங்க முடியும் ஆனால் நீங்கள் அதிகப்பட்சமாக மூன்று nominee களை உங்கள் கணக்குக்கு நியமிக்கலாம். மேலும் nominee களை நீங்கள் கணக்கு துவங்கும் போது நியமிக்க வேண்டும். nominee 18 வயது பூர்த்தியடைந்தவராகவோ அல்லது மைனராகவோ (minor) இருக்கலாம். மைனராக இருக்கும் பட்சத்தில் அவரது பாதுகாவலர் குறித்த விவரங்களையும் சமர்பிக்க வேண்டும். அதே போல் ஒன்றுக்கு மேற்பட்ட nominee களை நியமிக்கும் போது அவர்களுக்கு எவ்வளவு பங்கு என்பதை சதவிகித அடிப்படையில் குறிப்பிட வேண்டும்.
ஒருவர் வருங்கால வைப்பு கணக்கையும் தேதிய ஓய்வூதிய கணக்கையும் வைத்துக் கொள்ள முடியுமா ?
வருங்கால வைப்பு நிதி கணக்கில் பணியாளர்களால் மட்டுமே சேர முடியும். ஆனால் தேதிய ஓய்வூதிய கணக்கை சம்பளம் வாங்குபவர் அல்லது சுய தொழில் செய்பவர் என யார் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். அதே நேரம் சம்பளம் வாங்கும் ஒரு பணியாளர் இந்த இரண்டு கணக்குகளையும் ஒரே நேரத்தில் வைத்துக் கொள்ளலாம்.

Stomach Weight Loss Tips In Tamil | தொப்பையை குறைப்பது இவ்வளவு சுலபமா?

Weight Loss Tips In Tamil: சரிபாதி நபர்களுக்கு பிரச்னை உடல் எடைதான். இதற்காக மருந்து, மாத்திரைகள், ஆபரேஷன் என களம் இறங்கி விடுபவர்கள் உண்டு. அதெல்லாம் அவசியமில்லை, அன்றாடம் வீட்டில் கிடைக்கும் எளிமையான உணவுப் பொருட்களைக் கொண்டே உடல் எடை மற்றும் தொப்பையை குறைக்க முடியும் என்கிறார்கள், உணவுத்துறை வல்லுனர்கள்.
அப்படி பலராலும் பரிந்துரைக்கப்படும் எளிய ஒரு உணவு வகை பற்றி இங்கு பார்க்கலாம். அது, இஞ்சி-எலுமிச்சை-தேன் கலவைதான். இதை எப்படி தயாரிப்பது?

Stomach Weight Loss Tips In Tamil: தொப்பை குறைய எலுமிச்சை, இஞ்சி

1. ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்து, அதைப் பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும். போதுமான அளவுக்கு இஞ்சி எடுத்துக் கொண்டு அதை மசித்து வைத்துக் கொள்ளவும்.
2. இன்னொருபுறம் 3 டம்ளர் அளவுக்கு தண்ணீரை கொதிக்க வைக்கவும். அந்தத் தண்ணீரில் மசித்த இஞ்சியை 5 முதல் 10 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
3. பின்னர் இஞ்சி கரைசலை வடித்து, இஞ்சி துகள்களை அகற்றவும். துகள்கள் அகற்றப்பட்ட இஞ்சி கரைசலுடன் எலுமிச்சை சாற்றை சேர்க்கவும்.
4. குடிக்கப் போதுமான அளவு குளிர வைக்கவும். தேவையைப் பொறுத்து தேன் சேர்த்துக் கொள்ளவும். தேன் கட்டாயம் அல்ல.
5. பிரிட்ஜில் வைத்தும் இந்த இஞ்சி-லெமன்-தேன் கலவையை பயன்படுத்தலாம். ஒரு நாளில் 3 வேளை எடுத்துக் கொள்வது நலம்.
இஞ்சியில் உள்ள ஜிஞ்சரால்ஸ், ஷாகால்ஸ் ஆகியன செரிமானத்தை அதிகப்படுத்தக் கூடியவை. இது உடல் எடை குறைவுக்கு வெகுவாக உதவும். அதேபோல எலுமிச்சையில் விட்டமின் சி மட்டுமன்றி, கலோரியை எரிக்கக்கூடிய தன்மையும் இருக்கிறது. இவை இரண்டும் இணைந்து, எடைக் குறைப்பில் முக்கியப் பங்காற்றுகின்றன.
 

Most Reading

Sidebar One

Contact Form

Name

Email *

Message *